இலங்கையில் முஸ்லிம் அரசாங்க அதிபர் பதவி நீக்கம் - இனவாத நடவடிக்கையா

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஒருவர், ஒன்றரை வருடங்களின் பின்னர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், "இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடானது இன ரீதியான பழிவாங்கலா" என்று, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் கேள்வியெழுப்பியுள்ளார்.


இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா என்பவர், 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா, இலங்கையில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இரண்டாவது முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.